எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

முந்திரிக் குழம்பு

 


தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - ஒரு கப்

பூண்டு - அரை கப்

தக்காளி - 5

மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி

மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

புளி - எலுமிச்சை பழ அளவு

கடுகு - அரைத் தேக்கரண்டி

வெந்தயம் - அரைத் தேக்கரண்டி

சீரகம் - அரைத் தேக்கரண்டி

சோம்பு - அரைத் தேக்கரண்டி

பட்டை - சிறு துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 1

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

தேங்காய் - ஒரு தேக்கரண்டி

முந்திரி - 15

கறிவேப்பிலை - தேவையான அளவு


செய்முறை:

🔘 வெங்காயம் மற்றும் பூண்டை இரண்டிரண்டாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.

🔘 புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

🔘 வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

🔘 பிறகு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

🔘 வதக்கியவற்றுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.

🔘 தக்காளி குழைந்ததும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

🔘 தேங்காய் துருவலுடன் முந்திரியை சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

🔘 சுவையான முந்திரிக் குழம்பு தயார். விரும்பினால் 20 முழு முந்திரியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கலாம்.

No comments

Powered by Blogger.