எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

பெருநாள் பராசாப்பம்

 


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு படி(கொர கொரப்பானது)

தேங்காய் - பெரியது ஒன்று (முதல் தேங்காய் பால் எடுக்க)

முட்டை - 8

பொட்டுக்கடலை - கால் கப்

பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று(பெரியது)

 நெய் - 100 மில்லி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

சமையல் சோடா - அரை தேக்கரண்டி


செய்முறை:

🔘 அரிசி மாவில் பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து சேர்த்து, பின்பு முட்டை, உப்பு, சமையல் சோடா மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்கு ஒன்று சேர இட்லி மாவைவிட சற்று கெட்டியாகக் கலக்கிக் கொள்ளவும். அதை 4 மணி நேரம் புளிக்க விடவும்.

🔘 ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

🔘 புளித்திருக்கும் மாவில் வெங்காயத்தையும், நெய்யையும் ஊற்றி நன்கு கலக்கி பத்து நிமிடம் வைக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

🔘 ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு வந்ததும், ஒரு கரண்டி நிறைய மாவு எடுத்து ஊற்றி, மூடிபோட்டு தீயை குறைத்து வைத்து வேக விடவும்

🔘 சிவந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

🔘 சுவையான பெருநாள் பராசாப்பம் தயார். இது இஸ்லாமிய இல்லங்களில் பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்.

No comments

Powered by Blogger.