எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

பரோட்டா சிக்கன் குருமா

 

தேவையான பொருட்கள்:

கறி - கால் கிலோ

தக்காளி - 2

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 3

தேங்காய் விழுது - கால் கப்

உப்பு - ஒன்றரை தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

கறி மசாலா - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டி

செய்முறை:

🔘 அதிகம் எலும்பில்லாத இறைச்சியாக எடுத்து, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஆட்டிறைச்சி என்றால் சிலர் எலும்புக் கறியாக சேர்த்துக் கொள்வர். விருப்பத்திற்கேற்றார்போல் எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும்.

🔘 வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து கால் கப் எடுத்துக் கொள்ளவும்.

🔘 குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

🔘 ஒரு நிமிடம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

🔘 பின்னர் நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள், கீறின பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

🔘 தக்காளி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறிவிடவும்.

🔘 பிறகு அதில் சிக்கனைப் போட்டு பிரட்டி விடவும்.

🔘 இப்போது அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.

🔘 அதிலேயே கறி மசாலா, மல்லித் தூள், உப்பு போட்டு கலக்கி விடவும். இதனை சிறிது நேரம் வேகவிடவும்.

🔘 3 நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி விடவும்.

🔘 குக்கரில் வெயிட் போட்டு இரண்டு விசில் வரை வேகவிடவும். கறி வெந்தது பார்த்து 

இறக்கி சூடாக பரோட்டாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்

No comments

Powered by Blogger.