எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

தேங்காய் பால் சாதம்



தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - ஒன்றரை கப்

அரிசி - ஒன்றரை கப்

சின்ன வெங்காயம் - 12

இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

ஏலக்காய் - 3

கிராம்பு - 4

பட்டை - 2

உப்பு - 2 தேக்கரண்டி

எண்ணெய் - கால் கப்


செய்முறை:

🔘 சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுக்கவும். அரிசியை கழுவி எடுத்துக் கொள்ளவும்.

🔘 தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து இரண்டே கால் கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.

🔘 ஒரு எலக்டிரிக் குக்கரில் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.

🔘 அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

🔘 அதனுடன் இரண்டே கால் கப் தேங்காய் பால் சேர்க்கவும்.

🔘 மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றவும். உப்பு சேர்க்கவும்.

🔘 குக்கர் பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பில் வைத்தே கொதிக்க விடவும்.

🔘 சுமார் 3 நிமிடங்கள் கழித்து, கொதித்து நுரை வரும் போது அரிசியை போடவும்.

🔘 அதன் மேலே கொத்தமல்லி தழையினைத் தூவி கிளறி விட்டு 2 நிமிடம் வேகவிடவும்.

🔘 பின்னர் பாத்திரத்தை எடுத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து மூடி வைத்து வேகவிடவும்.

🔘 சாதம் நன்கு வெந்தவுடன் பாத்திரத்தை குக்கரில் இருந்து எடுத்துவிடவும். மேலே 

கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அலங்கரிக்கவும். 


குறிப்புகள்

1. இந்த சாதத்துடன் தாளிச்சா, கோழி குருமா போன்றவை சேர்த்து சாப்பிட அலாதி 

சுவையாக இருக்கும்.

No comments

Powered by Blogger.