எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

80 - Abasa

 80 - ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்) (Abasa - عبس)


80:1 - அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.


80:2 - அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,


80:3 - (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?


80:4 - அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்".


80:5 - (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-


80:6 - நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.


80:7 - ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.


80:8 - ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,


80:9 - அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-


80:10 - அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.


80:11 - அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.


80:12 - எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.


80:13 - (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.


80:14 - உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.


80:15 - (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-


80:16 - (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.


80:17 - (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!.


80:18 - எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)


80:19 - (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.


80:20 - பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.


80:21 - பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.


80:22 - பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.


80:23 - (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.


80:24 - எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.


80:25 - நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.


80:26 - பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-


80:27 - பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.


80:28 - திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-


80:29 - ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் 


80:30 - அடர்ந்த தோட்டங்களையும்,


80:31 - பழங்களையும், தீவனங்களையும்-


80:32 - (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,


80:33 - ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -


80:34 - அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -


80:35 - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;


80:36 - தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-


80:37 - அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.


80:38 - அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.


80:39 - சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.


80:40 - ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.


80:41 - அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.


80:42 - அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.


       Back                    Home                   Next


No comments

Powered by Blogger.